Pages

Saturday, February 25, 2023

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 15 | சத்தியாக்ரஹம்

மஹாத்மா காந்தியின் 'ஆசிரம வாழ்க்கை' 14 | கல்வி

11-7-32.

ஆசிரமத்தின் வெவ்வேறு வேலைகளின் விவரங்கள் அனேகமாகச் சொல்லப்பட்டுவிட்டன. ஆசிரமம் இருந்துவருவதே சத்தியத்தில் உறுதியாய் இருப்பதன் மூலமாக சத்திய சோதனை செய்வதற்காக. இத்தகைய உறுதியோடு சத்தியாக்ரஹமென்ற ஆயுதத்தைக் கையாள நேரும்பொழுது ஆசிரமம் அதைப் பிரயோகம் செய்து இந்த சத்தியாக்ரஹத்தின் விதிகளையும் வரம்புகளையும் ஆராய்கிறது. சாதாரணமாக விதிகள் எப்படியிருக்க வேண்டுமென்ற சர்ச்சையும் ஏற்கெனவே நடத்தப்பட்டுவிட்டது. ஆனால் சத்தியாக்ரஹத்தின் வரம்பு யாது? இந்த ஆயுதத்தை எந்த சமயத்தில் தீவிரமாக உபயோகிக்கலாம்? மனிதன் சத்தியத்திலேயே உறுதியாக நிற்பதற்கும் சத்தியாக்ரஹமென்ற பெயரளிக்கலாம். இங்கே இந்த சத்தியாக்ரஹத்தைப் பற்றி நாம் பேசவில்லை. பிறரிடம் ஒரு ஆயுதமாக உபயோகிக்கப்படும் சத்திக்ரஹத்தைப் பற்றியே இங்கே பேசப்படுகிறது.

இத்தகைய சத்தியாக்ரஹம் தோழர்களை எதிர்த்தும், பந்துக்களை எதிர்த்தும், சமூகத்தை எதிர்த்தும், அரசாங்கத்தை எதிர்த்தும், உலகையே எதிர்த்தும் செய்யப்படலாம். இதனடிப் படையில்,

(இந்த வரலாறு இதற்குமேல் எழுதப்படக் கூடவில்லை.)

***

No comments:

Post a Comment