தமிழ் சூழலில் இயங்கிய முக்கியமான கலை ஆளுமை ஓவியர் திரு.ஆதிமூலம் அவர்கள்.
.
கோட்டோவியங்களில் மிகப்பெரிய தாவல்களை நிகழ்த்தி காட்டியவர்.எழுபதுகளில் தமிழ் சிற்றிலக்கிய சூழலில் அவரது ஓவியங்கள் முக்கிய பங்காற்றின..
எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர், அவரது நாவலான ஜேஜே சில குறிப்புகளுக்கு கோட்டோவியங்கள் தீட்டியுள்ளார்.
காந்தி நூற்றாண்டு விழாவை ஒட்டி 1966 ல் ,காந்தியின் வாழ்வின் வெவ்வேறு முக்கியமான தருணங்களை நூறு கோட்டோவியங்களாக வடித்தார்.
உலகெங்கிலும் அவ்வோவியங்கள் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின
காந்தி நூற்றாண்டு விழாவை ஒட்டி 1966 ல் ,காந்தியின் வாழ்வின் வெவ்வேறு முக்கியமான தருணங்களை நூறு கோட்டோவியங்களாக வடித்தார்.
உலகெங்கிலும் அவ்வோவியங்கள் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின
![]() |
மவுண்ட்பேட்டன் மற்றும் லேடி மவுன்ட்பேட்டனுடன் |
" காந்தியின் உடலசைவுகளை அக்கோடுகளில் பார்க்க முடியுமென்ற பிரமை எனக்கு ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அந்தக் கோட்டுச் சித்திரங்களை அடங்காத தாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த புகைபப்டமும், எந்த திரைபப்டமும் அளிக்காத சித்திரங்கள். காந்தியின் அபாரமான தனிமை. அவர் தன்னுள் ஆழ்ந்து இருக்கும் நிலைகள். இப்போதுகூட என் படிப்பறைச்சுவரில் இரு படங்கள்தான் இருக்கின்றன. அசோகமித்திரனின் படம் ஒன்று, ஆதிமூலம் வரைந்த காந்தியின் கோட்டோவியம் ஒன்று "
செகந்திராபாதை சேர்ந்த ஓவியர் சேதுராமலிங்கம் வேலுமணி அவர்களின் முயற்சியால் இவ்வோவியங்கள் நமது தளத்தில் வலையேற்றப்படுகின்றன.
அவர் வரைந்த தண்டி யாத்திரை கோட்டோவியமும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஓவிய தேர்ச்சி அற்ற சாமானியர்களுக்கு கூட இந்த ஓவியங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாத அபார அக எழுச்சியை அளிக்கிறது .
அவர் வரைந்த தண்டி யாத்திரை கோட்டோவியமும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஓவிய தேர்ச்சி அற்ற சாமானியர்களுக்கு கூட இந்த ஓவியங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாத அபார அக எழுச்சியை அளிக்கிறது .
![]() |
நேருவுடன் |

![]() |
ராஜாஜியுடன் |

நன்றி - ஓவியர் சேதுராமலிங்கம் வேலுமணி
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
கோட்டோவியங்களல்ல.. உயிரோவிங்கள் என்பதே பொருத்தமாக இருக்கும். காந்திஜியின் ஆளுமை இவ்வோவியங்களில் நன்கு வெளிப்படுவதாகவே தோன்றுகிறது.
ReplyDelete