மானுடகுலத்தின் மேன்மையான வருங்காலத்தை எண்ணி கவலையுறும் ஒவ்வொரு மனிதனையும் காந்தியின் மரணம் ஆழமாக அசைத்துவிட்டது.அவரது அகிம்சை கொள்கைகளே அவர் உயிரை பறித்தது.தன் தேசம் சீர்குலைந்து , பொறுமையின்றி தத்தளித்துக் கொண்டிருந்த ஓர் தருணத்தில் அவரை பாதுகாத்துக்கொள்ள முனையாமல் ,ஆயுத பாதுகாப்பை ஏற்க மறுத்ததால் உயிர் துறந்தார்.அதிகாரத்தை பிரயோகிப்பதே தீது என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை , ஆதலால் அவரது இந்த நம்பிக்கையை ஏற்பவர்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றார் .இதயத்திலும் மனத்திலும் இந்த நம்பிக்கையை சுமந்துக்கொண்டு மகத்தான தன் தாய்நாட்டை சுதந்திரத்தை நோக்கி இட்டு சென்றார்.வழமையான அரசியல் சூழ்ச்சிகள் ,வழிமுறைகளை தவிர்த்து அறம் தோய்ந்த ,உயர்ந்த நெறிகளால் நிறைந்த வாழ்வை முன்னுதாரணமாக கொண்டும் கூட மக்கள் சக்தியை திரட்டலாம் என்பதை உலகிற்கு உணர்த்தினார் .
அறநெறிகள் சீரழிந்துக் கொண்டிருக்கும் இக்காலங்களில்,அரசியல் தளத்தில் மானுட உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற ஒரே உலக தலைவர் அவர்தான் என்பதை ஆழ்மனதில் உணர்வதே உலகமக்கள் அனைவரும் அவர் மேல் அன்பும் மதிப்பும் கொண்டிருக்க முக்கிய காரணம்.நாம் முழு முயற்சியோடு அந்த உயரத்தை எட்டிப்பிடிக்க முனைய வேண்டும்.அனைத்து இக்கட்டுகளையும் கடந்து மானுடகுலம் தழைக்க - சர்வதேச உறவுகளில் எடுக்கப்படும் முடிவுகள்,இதுவரை மலிந்து கிடக்கும் சுயநலத்தோடு இல்லாமல், சட்டப்பூர்வமாகவும் நீதியுனர்வுடனும் இருக்க வேண்டும் .
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ( காந்திக்கு செலுத்திய அஞ்சலி )
மானுடம் வாழ தன்னை மாய்த்துக்கொள்ள துணிந்த அனைத்து தியாகிகளுக்கும் - அஞ்சலி
No comments:
Post a Comment