Pages

Thursday, January 26, 2012

காந்தியின் கோட்டோவியங்கள்




தமிழ் சூழலில் இயங்கிய முக்கியமான கலை ஆளுமை ஓவியர் திரு.ஆதிமூலம் அவர்கள்.

.





கோட்டோவியங்களில் மிகப்பெரிய தாவல்களை நிகழ்த்தி காட்டியவர்.எழுபதுகளில் தமிழ் சிற்றிலக்கிய சூழலில் அவரது ஓவியங்கள் முக்கிய பங்காற்றின..

எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர், அவரது நாவலான ஜேஜே சில குறிப்புகளுக்கு கோட்டோவியங்கள் தீட்டியுள்ளார்.

காந்தி நூற்றாண்டு விழாவை ஒட்டி 1966 ல் ,காந்தியின் வாழ்வின் வெவ்வேறு முக்கியமான தருணங்களை நூறு கோட்டோவியங்களாக வடித்தார்.

உலகெங்கிலும் அவ்வோவியங்கள் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின


வேல்யு ஆர்ட் பாவுண்டேஷன் (value art foundation) 1997 ஆம் ஆண்டில் பதிப்பித்த "பிட்வீன் தி லைன்ஸ்" (between the lines) எனும் அறிய மறுபதிப்பு காணாத புத்தகத்தில் அவர் வரைந்த அனைத்து காந்தி ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன .


2008 ஆம் ஆண்டு காலமான ஆதிமூலம் அவர்களுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அஞ்சலி கட்டுரையில் அவரது காந்தி ஓவியங்களை பற்றி குறிபிட்டுள்ளார்
 மவுண்ட்பேட்டன்  மற்றும் லேடி மவுன்ட்பேட்டனுடன்   

" காந்தியின் உடலசைவுகளை அக்கோடுகளில் பார்க்க முடியுமென்ற பிரமை எனக்கு ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் அந்தக் கோட்டுச் சித்திரங்களை அடங்காத தாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த புகைபப்டமும், எந்த திரைபப்டமும் அளிக்காத சித்திரங்கள். காந்தியின் அபாரமான தனிமை. அவர் தன்னுள் ஆழ்ந்து இருக்கும் நிலைகள். இப்போதுகூட என் படிப்பறைச்சுவரில் இரு படங்கள்தான் இருக்கின்றன. அசோகமித்திரனின் படம் ஒன்று, ஆதிமூலம் வரைந்த காந்தியின் கோட்டோவியம் ஒன்று "




செகந்திராபாதை சேர்ந்த ஓவியர் சேதுராமலிங்கம் வேலுமணி அவர்களின் முயற்சியால் இவ்வோவியங்கள் நமது தளத்தில் வலையேற்றப்படுகின்றன.




அவர் வரைந்த தண்டி யாத்திரை கோட்டோவியமும் இதில் இடம்பெற்றுள்ளது.


ஓவிய தேர்ச்சி அற்ற சாமானியர்களுக்கு கூட இந்த ஓவியங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாத அபார அக எழுச்சியை அளிக்கிறது .



நேருவுடன் 

                                          

ராஜாஜியுடன் 

                                     



ஓவியர் சேதுராமலிங்கம் வேலுமணி -வரைந்த தண்டி யாத்திரை 




நன்றி - ஓவியர் சேதுராமலிங்கம் வேலுமணி 


அனைவருக்கும் இனிய குடியரசு  தின வாழ்த்துக்கள் 






1 comment:

  1. கோட்டோவியங்களல்ல.. உயிரோவிங்கள் என்பதே பொருத்தமாக இருக்கும். காந்திஜியின் ஆளுமை இவ்வோவியங்களில் நன்கு வெளிப்படுவதாகவே தோன்றுகிறது.

    ReplyDelete