Pages

Wednesday, January 11, 2012

காந்தியைத் தேடி-2011 -2-பரிசளிப்பு


காந்தி இன்று இணைய தளம் சார்பாக காந்தியைத் தேடி 2011 -பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி நடைபெற்றது நினைவில் இருக்கும் என்றெண்ணுகிறேன் .போட்டியில் முதல் பரிசு வென்ற கட்டுரையும் தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது.பங்குக் கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பங்குக்கொண்ட ஐந்து பள்ளிகளுக்கு சென்று ,பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினோம்.பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஓர் சான்றிதழும் ,யானை டாக்டர் இலவச பிரதியும் வழங்கப் பட்டது.பள்ளி வாரியாக முதல் பரிசு பெற்றவர்களுக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதை தொகுப்பு வழங்கப் பட்டது.பள்ளி வாரியாக இரண்டாம் பரிசு வென்றவர்களுக்கு- ஜெயமோகனின் பனிமனிதன் கதைப்புத்தகம் சிலருக்கும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி சிறு சிறு புத்தகங்களாக வெளிவந்துள்ள கதைகம்பளம் சிறுவர் கதை தொகுப்புகள் சிலருக்கும் வழங்கப்பட்டது.


ஒட்டுமொத்த அளவில் முதல் மூன்று பரிசு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு முறையே ரூ.1000/-,ரூ.750/-, ரூ.500/- வழங்கப்பட்டது.

பரிசு விபரம் 

முதல் பரிசு
மாணவர்.சிவச்சந்திரன்- 11 ஆம் வகுப்பு,எஸ்.எம்.எஸ்.வி.ஆண்கள் மேல்நிலை பள்ளி, காரைக்குடி 

இரண்டாம் பரிசு- 
மாணவி.எஸ்.பவானி - 11 ஆம் வகுப்பு,சி.சி. பெண்கள் மேல்நிலை பள்ளி ,கோட்டையூர் 

மூன்றாம் பரிசு 
மாணவி.எம்.மெய்யம்மை -9 ஆம் வகுப்பு, சி.சி. பெண்கள் மேல்நிலை பள்ளி, கோட்டையூர் 

பள்ளிவாரியாக 

தஞ்சாவூர் அருணாச்சலம் செட்டியார் அரசு மேலிநிலை பள்ளி 

முதல் பரிசு- சி.வினோத்- 9 ஆம் வகுப்பு 
இரண்டாம் பரிசு - அ.விஜயலட்சுமி - 9 ஆம் வகுப்பு 

அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி 

முதல் பரிசு - எல்.எஸ்.சங்கர பாண்டியன் -9 ஆம் வகுப்பு
இரண்டாம் பரிசு- எம்.ஷண்முக ப்ரியா - 10 ஆம் வகுப்பு
அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி-பரிசு பெற்ற மாணவர்கள்- சங்கர பாண்டியன், ஷண்முக ப்ரியா  , தலைமை ஆசிரியர்    

ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 

முதல் பரிசு- சிவச்சந்திரன்- 11 ஆம் வகுப்பு 
இரண்டாம் பரிசு - அரவிந்த் - 10 ஆம் வகுப்பு 
எஸ்.எம்.எஸ்.வி பள்ளி- பரிசுபெற்ற மாணவர்கள்.சிவச்சந்திரன், அரவிந்துடன் ஆசிரியர்கள் 
ஸ்ரீ மீனாக்ஷி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 

முதல் பரிசு - கார்த்திகா -11 ஆம் வகுப்பு 
இரண்டாம் பரிசு - ஆர்.மாலா -11 ஆம் வகுப்பு 
எஸ்.எம்.பெண்கள் பள்ளி- பரிசுக்குரிய மாணவிகள்-கார்த்திகா ,மாலாவுடன் தலைமையாசிரியர்  
சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 

முதல் பரிசு - எஸ்.பவானி- 11 ஆம் வகுப்பு 
இரண்டாம் பரிசு- எம்.மெய்யம்மை - 9 ஆம் வகுப்பு .
சி.சி.பெண்கள் பள்ளி-பரிசுக்குரிய மாணவிகள் மெய்யம்மை,பவானி ஆசிரியர்களுடன்   
பரிசு வென்ற மாணவ மாணவியர்களுக்கும்,அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இப்போட்டிகளை நடத்த மொத்த செலவே ரூ.5500 தான்.இதில் நமது இணைய தளம் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டது, சான்றிதழ் மற்றும் பரிசுதொகையை மணிகண்டன் நினைவு அறகட்டளை ஏற்றுக்கொண்டது. 

காந்தி இன்றைய தொலைக்காட்சி அறிவுஜீவிகளைப் போல் அல்ல ,அபாரமான களப்பணியாளர் .அவரது வாழ்வும் அனுபவங்களும் களப்பணியை சார்ந்ததே, அதன் பொருட்டே அவர் கூறும் அனேக விஷயங்கள்   கடைபிடிக்க கூடிய நடைமுறை சாத்தியம் கொண்டவை.நாமறிந்த ஆக சிறந்த நடைமுறை லட்சியவாதி அவர்தான் காந்தியை புரிந்துகொள்ள வாசித்து எழுதுவது எப்படி முக்கியமோ அப்படி செயல்தளத்தில் வாழ்வனுபவங்களை எதிர்கொள்வதும் மிக முக்கியம்.இது ஒரு சிறு முயற்சி என்றாலும் கூட நிறைவாக இருக்கிறது 


அடுத்தடுத்து சில பரீட்சார்த முயற்சிகள் மேற்கொள்வது பற்றி சிந்தித்து வருகிறோம்.வாசகர்கள் ஏதேனும் யோசனைகள் இருந்தாலும் தெரிவிக்கலாம் .



















1 comment:

  1. மிகவும் நல்ல விஷயம். நடத்துபவர்களுக்கும், டாக்டர்.சுனில் அவர்களுக்கும் வாழ்த்துகள்! தொடர்ந்து இப்படிப்பட்ட காரியங்களை இடையறாது செய்ய தேவையான வாய்ப்புகள் அமையட்டும். மிக்க நன்றி.

    ReplyDelete