ஹரிஜன் சேவக் சங் அமைப்பின் மாதாந்திர அறிக்கைகள் ஹரிஜன் ஆங்கில இதழில் வாசிக்க நேர்ந்தது. அவ்வமைப்பின் பணிகளை இது கொண்டு அறிய முடிவது ஆர்வமூட்டுவது
.
G. Ramachandran |
அண்ணல் காந்தியின் கூற்றுகளாலும் அழைப்பாலும் ஈர்க்கப்பட்டு ஏராளமானோர் இப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
கல்வி, ஆன்மிகம், சுத்தம் ,சுகாதாரம் ,பொருளாதாரம், சமூக நல்லிணக்கம் என பல விதங்களில் இப்பணிகள் நடைபெற்றுள்ளன. ஹரிஜன் ஆங்கில இதழில் தமிழ்நாட்டோடு பிற மாகாணங்களில் நடைபெற்ற செயல்பாடுகளின் அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன எனினும் முதலில் தமிழகத்தில் நடைபெற்ற பணிகளைப் பார்ப்போம்.- சித்ரா பாலசுப்பிரமணியம்
1933 , பிப்ரவரி மாத அறிக்கை
சமயப் பணிகள்: கோயம்புத்தூர் மாவட்டம் ,பொள்ளாச்சி தாலுகா,லட்சுமிபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் ஹரிஜனங்களுக்கு அனுமதி அளிப்பதென அறங்காவலர்கள் சம்மதித்துள்ளனர்.
மாகாணமெங்கும் சாதி இந்துக்களும் ஹரிஜனங்களும் இணைந்து கலந்து கொண்ட பஜனை நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றின் விவரம்.
இடம். எண்ணிக்கை
சேலம். 3
காஞ்சிபுரம். 2
திருவெண்ணெய்நல்லூர். 1
கள்ளக்குறிச்சி. 6
கோயம்புத்தூர். 4
திண்டுக்கல். 2
திருநெல்வேலி. 1
கும்பகோணம். 5
நாகப்படினம். 2
மன்னார்குடி. 1
திருச்சி( 9 சேரிகளில்). 3
மதுரை. 4
வேலூர். 1
கல்வி சார்ந்த பணிகள்: கோயம்புத்தூரில் உயர்நிலைப் பள்ளிக்கான உதவித்தொகை 2-10-0
திருச்சியில் கல்லூரித் தேர்வுக் கட்டணம் 25/-
திருச்சியில் ஒரு மாணவருக்கு விடுதிக் கட்டணம் 10/
சிதம்பரம் நந்தனார் மடத்தை ஒட்டி ஹரிஜனப் பெண்கள் விடுதி நடத்த மாதம் ரூபாய் 150 தருவதாக வடாற்காடு மாவட்ட குழு ஒப்புக் கொண்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த டாக்டர் டி.எஸ் .இராமச்சந்திரன் 4000 ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.அந்தத் தொகையின் வட்டியைக் கொண்டு ஹரிஜன விடுதியின் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருச்சியில் 2, மதராஸில் 2, திருநெல்வேலி 1, திண்டுக்கல் 1,திருவெண்ணைய்நல்லூர் 1 ஆகிய பள்ளிகளில் ஹரிஜனக் குழந்தைகளைச் சேர்த்துவிடும் பணி வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. திருச்சி தஞ்சாவூரில்,SUS( servants of untouchable society- ஹரிஜன் சேவக் சங் இந்தப் பெயரில் தான் முதலில் செயல்பட்டது.) அமைப்பினர் ,உள்ளூர் தலைவர்களைச் சந்தித்து ஹரிஜனக் குழந்தைகளைப் பொதுப் பள்ளியில் சேர்க்க ஆவன செய்யுமாறு வேண்டுகோள் வைத்தனர்.
இரவுப் பள்ளிகள்:
கோவையில் மாதம் பதினாறு ரூபாய் செலவில் இரண்டு இரவுப் பள்ளிகள்.
இலவசப் புத்தகம், ஸ்லேட்டுகளுக்கான செலவு ரூ.25/
இலவச வாசிப்பு அறைக்குக் கோவையில் 25/ ரூபாய் செலவு செய்யப்பட்டது.
கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கு இலவசப் புத்தகங்கள்,ஸ்லேட்டுகள் வழங்கப்பட்டதோடு ஒரு ஹரிஜன ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.
மதுரையில் உள்ள சேரி ஒன்றில் ஐம்பது ரூபாய்செலவில் அமைக்கப்பட்ட பள்ளியில் 38 ஹரிஜனக் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இரவுப்பள்ளி ஒன்று நடத்த மாவட்டக் குழு மாதம் ஐந்து ரூபாய் உதவுகிறது.
காரைக்குடி எலவக்கோட்டையில் மாதம் இருபது ரூபாய் செலவில் பகல்பள்ளி
திருச்சி வரகனேரி ,கல்கண்டார் கோட்டை ஆகிய இடங்களில் மாதம் இருபது ரூபாய் செலவில் இரண்டு இரவுப் பள்ளிகள்.
திருவெண்ணெய்நல்லூரில் 25/ செலவில் பகல்பள்ளி மற்றும் இரவுப்பள்ளி
இந்தப் பள்ளிகள் அனைத்தும் சேரிகளில் அமைக்கப்பட்டன.
பொருளாதாரம்:
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் செருப்பு தயாரிக்கும் பணி ஹரிஜனங்களால் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நான்கு மிராசுதார்ர்கள் வீட்டு வேலையாட்களாக நான்கு ஹரிஜனங்களுக்கு வேலை வழங்கினர்.
ஹரிஜனங்களை வீட்டு வேலையாட்களாக நியமித்துக் கொள்ளும்படியான கோரி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
சுகாதாரவசதிகள்: இதில் சேரிகளுக்கு நேரில் சென்று அமைப்பின் தொண்டர்கள் சுகாதாரப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.இடங்களும் எண்ணிக்கையும் பின்வருமாறு:
சேலம் - நான்கு சேரிகளில் இரண்டு முறை. சிதம்பரம் -1, திருவெண்ணெய்நல்லூர்-3, கள்ளக்குறிச்சி -1,
திண்டுக்கல் துப்புரவாளர் குடியிருப்பு -2, வண்ணாம்பட்டி சேரி-1, திருநெல்வேலியில் ஐம்பது சேரிகள் ,எட்டு சேரிகளில் வாரம் ஒருமுறை,கும்பகோணம் பதிமூன்று சேரிகளில் இரண்டு முறை,நாகப்பட்டினம் இரண்டு சேரிகளில் இரண்டு முறை,ஆரணி ஒருமுறை, மேட்டூர் இரண்டு முறை,திருச்சி பன்னிரெண்டு சேரிகளில் மூன்று முறை.
கோயம்புத்தூர்,கும்பகோணம்,மதராஸ்,திருச்சி, திண்டுக்கல் முனிசிபாலிட்டிகள்ரகூடுதல் குடிநீர் குழாய் நிறுவ ஒப்புக்கொண்டுள்ளன.
மதுவிலக்குப் பிரச்சாரம் கிராமங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்கொள்ளப்பட்ட இடங்களும் தவணைகளும் பின்வருமாறு: சேலம் மோஹனூர் ஐந்து முறை, திருவெண்ணெய்நல்லூர்,கள்ளக்குறிச்சி இரண்டு முறை, கோவை சுற்றுவட்டாரம் எட்டு முறை, திண்டுக்கல் இரண்டு முறை,திருநெல்வேலியில் பதினைந்து முறை, ரெங்கம்மாள் புரத்தில் காபி கிளப் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது, குடியிலிருந்து விலகும்படியாக.
அய்யம்பேட்டை,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம்,மன்னார்குடி,தஞ்சை,சீர்காழி,கோட்டையூர்,கும்பகோணம் ஆகிய இடங்களில் பன்னிரெண்டு முறை, மதுரை ஐந்து முறை,ஆரணி,மேட்டூர் ஏழு முறை,திருச்சி இரண்டு முறை.
இறந்த விலங்குகளை உண்ணாமை
தஞ்சை,கும்பகோணத்தில் இறந்த பசுவைப் புதைத்துவிடும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதில் அவர்களுக்கு வேறு உணவு வழங்கப்பட்டது.ஒரு கிராம்ம், இறந்த விலங்குகளை உண்ணுவதில்லை என உறுதியேற்றது.
பொது:
இரண்டாம் அக்ரஹாரத்தில் சாலையை ஒட்டியுள்ள கிணறு ஹரிஜனங்களுக்கு அனுமதிக்கப்பட்டது.
கோயம்புத்தூர் பொள்ளாச்சியில் ஒன்றும் உடுமலைப்பேட்டையில் இரண்டு கிணறுகளும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டன.
திருச்சியில் டாக்டர்.டி.எஸ்.ராமச்சந்திரனின் நன்கொடையினால் அங்கரை,குத்தூர் ஆகிய இடங்களில் இரண்டு குழாய்க் கிணறுகள் கட்டித் தரப்பட்டன.
மருத்துவ வசதி: திருச்சியில் மாவட்ட மருத்துவ குழுக்கள் ,மருத்துவர்கள் அருகிலிருக்கும் சேரி மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் கூடவே மருந்தகங்கள் இலவசமாக மருந்துகள் வழங்கவேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது.
இணை கூட்டங்கள்: ஹரிஜனங்களும் சாதி இந்துக்களும் இணைந்து கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்கள் ஏறக்குறைய நாற்பது நடத்தப்பட்டன.
எதிர்ப்பு: தென்னார்க்காடு ,திருவெண்ணைய்நல்லூரில் உள்ளூர் பள்ளிகளில் ஹரிஜனங்களை அனுமதிக்க சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டது.திருச்சி ,லால்குடியில் ஹரிஜனங்களுக்குச் சேவை செய்த ஒரு பிராமண இளைஞன் கோயிலுக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்தப் பிரச்சினையும் முடித்துவைக்கப்பட்டது. பொதுவாக கோயில் நுழைவுக்குத் தான் அதிக எதிர்ப்பு உள்ளது. நிர்மாணப் பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தருகின்றனர்.
கருத்தரங்கு: திருநெல்வேலியில் .புரிசை வண்ணாருக்காக்க் கூட்டம் நடத்தப்பட்டது.இவர்கள் ஹரிஜனங்களுக்குச் சலவைத் தொழில் செய்பவர்கள் என்பதால் அவர்களினும் கீழானவராக்க் கருதப்படுகின்றனர்.
இதில் முக்கியத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.இது ஒரு முக்கிய நிகழ்வு.( இந்தக் கூட்டம் குறித்தோ இதில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தோ மேலதிக விவரங்கள் தெரியவில்லை. )
திருச்சி நேஷனல் கல்லூரியின் மாணவர்கள் இருபத்தோரு ஹரிஜனங்களுக்கு வேட்டி வழங்கினர்.
நிர்மாணத் திட்டப் பணிகள் மிகத் தொடக்க நிலையிலேயே உள்ளன. கோயில் நுழைவு தான் ஹரிஜனங்களுக்குச் சம அந்தஸ்து வழங்கும்.
G. ராமச்சந்திரன், S.U.S. செயலாளர்.
No comments:
Post a Comment