தென்னாப்ரிக்காவின் சத்யாக்ரக போராட்டத்தில் பங்குக்கொண்டு, சிறை சென்று, நோய்வாய்பட்டு உயிர்துறந்த முதல் தியாகிகளில் ஒருவர் பதினாறே வயது நிரம்பிய தில்லையாடி வள்ளியம்மை.காந்தியின் மனசாட்சியை உலுக்கிய நிகழ்வு அது.எத்தனையோ வளர்ந்த நாடுகள் என்று பறைசாற்றும் தேசங்கள் தடுமாறிக்கொண்டிருந்ததை காந்தி இந்தியாவில் சாதித்தார், ஆம் பெண்களை அரசியல் படுத்தினார்.தேசிய போராட்டங்களிலும் சமூக போராட்டங்களிலும் பெண்கள் தெருவில் இறங்கி போராடியதே போராட்டத்திற்கு ஆன்ம வலுவேற்றியது.பெண்களின் உறுதியையும்,தியாக மனப்பாங்கையும் காந்தி தென்னாப்ப்ரிக்காவில் தான் முதன்முதலாக கண்டுக்கொண்டார்.அந்த அனுபவமே பிற்காலத்தில் அவரது அரசியல் நடவடிக்கைக்கு பயன்பட்டது.வள்ளியம்மையின் தன்னலம் மறந்த தியாக உள்ளமே காந்தியை இந்தியா வந்தவுடன் தஞ்சையின் கிராமப்புறங்களுக்கு 1915 ஆம் ஆண்டிலேயே வரவழைத்தது .இன்று அவரது நினைவுநாள் ,அதை நினைவுகோரும் வகையில் எழுதப்பட்டுள்ள அழகான ஓர் பதிவு-தேசமே தெய்வம் வலைப்பதிவில்...

நன்றி-குழலேந்தி
No comments:
Post a Comment