இன்ற உலக அரங்கில் அகிம்சை போராட்டங்களின் முக்கியமான ஆளுமை அமெரிக்காவை சேர்ந்த ஜீன் ஷார்ப்.1983 ஆம் ஆண்டு பாஸ்டனில் அகிம்சை வழிமுறைகளை பற்றி உலகளாவிய ஆய்வுகளை செய்து வரும்ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆராய்ச்சி மையத்தை தொடங்கினார். 1973 ஆம் ஆண்டு அவரது முனைவர் பட்ட ஆய்வை முன்வைத்து " பாலிடிக்ஸ் ஆப் நான் வயலன்ட் ஆக்ஷன் " எனும் புத்தகத்தை எழுதினார்.உலகெங்கிலும் உள்ள எத்தனையோ அகிம்சை போராட்டங்களுக்கு ஷார்ப்பின் எழுத்துக்கள் உதவியுள்ளன.செர்பியா, ஜார்ஜியா ,உக்ரைன் தொடங்கி அண்மைய துனிசியா எகிப்து புரட்சி வரை பல்வேறு போராட்டங்கள் ஷார்ப்பின் எழுத்துக்கள் முன்வைக்கும் வழிமுறைகளை கையாண்டுள்ளதாக நம்பப்படுகிறது.பர்மாவில் வெளியிடப்பட்ட அவரது மற்றுமொரு முக்கியமான புத்தகம் " ப்ரம் டிக்டேடர்ஷிப் டு டெமாக்ரசி " (from dictatorship to democracy- சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ) இப்புத்தகத்தில் அகிம்சை போராட்டங்களின் பல்வேறு படிநிலைகள் , சர்வாதிகாரத்தை எப்படி எதிர்கொள்வது , பேச்சுவார்த்தையின் நன்மை தீமைகள் என்று ஓர் அகிம்சை போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஓர் கையேடு என்றே சொல்லலாம் .
காந்தியை அகிம்சை போராட்ட ஆய்வாளர் என்று முன்வைக்கிறார் .அவரது போராட்டங்கள் எத்தனை விஞ்ஞானபூர்வமானது என்றும் அதன் உலகளாவிய முக்கியத்துவம் பற்றியும் பேசுகிறார்.காந்தியின் ஆளுமையின் வெவ்வேறு கூறுகளை வெளிச்சம் பாய்ச்சுகிறார் ஷார்ப் .காந்தியின் பன்முக ஆளுமையை புரிந்துகொள்ள இது மற்றுமொரு பரிமாணம் .இது ஒரு கோணம் மட்டுமே இதுவே காந்தியின் முழு மதிப்பீடு அல்ல என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இன்றைய ஜனநாயக யுகத்தில் காந்தியின் அரசியல் முக்கியத்துவம் என்ன ?
ஷார்ப் காந்தியை ஓர் புதிய யுகத்தின் முன்னோடியாக காண்கிறார்.இருபதாம் நூற்றாண்டிலும் இனி வரும் நூற்றாண்டுகளிலும் உலகம் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை காந்தியின் அணுகுமுறையை விரித்து எடுத்தல் மூலமே தீர்வுக்கான முடியும் என்கிறார்.மேலும் காந்தி, காந்தியத்தின் பாலுள்ள பல புரிதல் பிழைகளை ,புரட்டுகளை புறந்தள்ளுகிறார் .இக்கட்டுரை மேற்கின் மக்களுக்கு எழுதப்பட்டது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும், ஆதலால் இந்திய அரசியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கூட ஷார்ப் விளக்கியது புலப்படும் .மார்டின் லூதர் கிங் அகிம்சையின் முக்கியத்துவத்தை பற்றி சொன்னது " ஸ்பட்னிக்குகளும் எக்ஸ்ப்லோரர்களும் விண்ணில் மிதந்து கொண்டிருக்கும்இக்காலத்தில் , அடுக்குமண்டலத்தில் (stratosphere) பாய்ந்து கொன்று குவிக்கும் கொலை யந்திரங்களாக ஏவுகணைகள் இருக்கும் இக்காலத்தில் இனி எத்தேசமும் எப்போரிலும் வெல்ல முடியாது . வன்முறைக்கும் அஹிம்சைக்கும் இடையில் நாம் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய இனி எப்பொழுதும் வாய்ப்பில்லை . ஒன்று அஹிம்சை வழி அல்லது அழிவு பாதை இரண்டில் ஒன்று மட்டுமே சாத்தியம் ."
இன்றைய ஜனநாயக யுகத்தில் காந்தியின் அரசியல் முக்கியத்துவம் என்ன ?
ஷார்ப் காந்தியை ஓர் புதிய யுகத்தின் முன்னோடியாக காண்கிறார்.இருபதாம் நூற்றாண்டிலும் இனி வரும் நூற்றாண்டுகளிலும் உலகம் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகளை காந்தியின் அணுகுமுறையை விரித்து எடுத்தல் மூலமே தீர்வுக்கான முடியும் என்கிறார்.மேலும் காந்தி, காந்தியத்தின் பாலுள்ள பல புரிதல் பிழைகளை ,புரட்டுகளை புறந்தள்ளுகிறார் .இக்கட்டுரை மேற்கின் மக்களுக்கு எழுதப்பட்டது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும், ஆதலால் இந்திய அரசியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கூட ஷார்ப் விளக்கியது புலப்படும் .மார்டின் லூதர் கிங் அகிம்சையின் முக்கியத்துவத்தை பற்றி சொன்னது " ஸ்பட்னிக்குகளும் எக்ஸ்ப்லோரர்களும் விண்ணில் மிதந்து கொண்டிருக்கும்இக்காலத்தில் , அடுக்குமண்டலத்தில் (stratosphere) பாய்ந்து கொன்று குவிக்கும் கொலை யந்திரங்களாக ஏவுகணைகள் இருக்கும் இக்காலத்தில் இனி எத்தேசமும் எப்போரிலும் வெல்ல முடியாது . வன்முறைக்கும் அஹிம்சைக்கும் இடையில் நாம் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய இனி எப்பொழுதும் வாய்ப்பில்லை . ஒன்று அஹிம்சை வழி அல்லது அழிவு பாதை இரண்டில் ஒன்று மட்டுமே சாத்தியம் ."
---------------------------
ஜனவரி 30 , 1948 பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றுக் கொண்டிருந்த காந்தியின் மார்பிலும் வயிற்றிலும் மூன்று தோட்டாக்கள் பாய்ந்து அவரது உயிரை பறித்தது .மத கலவரங்களால் பற்றி எரிந்துக்கொண்டிருந்த இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்த காந்தி மேற்கொண்ட முயற்சிகள் பிடிக்காமல் கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டத்திலிருந்து ஓர் இளம் இந்து வெறியன் அவரை கொலை செய்தான் .காந்தியின் உண்ணாவிரதம் கடந்த ஒரு வருடமாக ரத்தவெள்ளத்தில் நீந்திக்கொண்டிருந்த கொல்கத்தாவிற்கும் ,ஒட்டுமொத்த பெங்காளுக்கும் அமைதியை மீட்டு தந்தது.பின்னர் டெல்லியிலும் பதட்டமான சூழல் நிலவியதை உணர்ந்துக் கொண்டு அங்கும் அமைதியை உருவாக்க அவரது வாழ்வின் கடைசி உண்ணாவிரதம் பயன்பட்டது .இது போன்ற பல செயல்களை அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்படவில்லை .கொல்கத்தாவில் .அவரது வசிப்பிடத்தை ஒரு கூட்டம் தாக்கியது , அவரை நோக்கி கல் வீசப்பட்டது,மூங்கில் தடி வீசப்பட்டது ,இருமுறையும் மயிரிழையில் உயிர் தப்பினார் .அவரது டெல்லி உண்ணாவிரதத்தின் பொழுது வெளியில் "காந்தியை சாக விடுங்கள்" என்று சிலர் கோஷம் எழுப்பினர் .மரணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு , மதிய நேரத்து பிரார்த்தனை கூட்டத்தின் பொழுது அருகாமையிலுள்ள தோட்டத்திலிருந்து அவர் மீது சிறிய நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. மிக முக்கியமான அரசியல் தலைவரின் மரணம் எனும் அந்த மோசமான விளைவை அந்த மூன்று தோட்டாக்கள் நிறைவேற்றியது.இந்தியாவும்,ஒட்டுமொத்த உலகமும் சோகத்தில் ஆழ்ந்தது.அரசியல் தலைவர்களும் ,சாமானிய மக்களும் தங்கள் தனிப்பட்ட இழப்பாக ஒருசேர உணர்ந்தனர்.
அந்த ஜனவரி திங்களிலிருந்து வருடங்கள் பல உருண்டோடிவிட்டன .உலக அரசியலை கணிசமாக மாற்றிய எத்தனையோ உலக நிகழ்வுகள் கடந்துவிட்டன.ஸ்டாலினின் மரணம், சீனாவில் கம்யுனிஸ்டின் வெற்றி, ஹைட்ரஜன் வெடிகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளின் கண்டுபிடிப்பு, ஹங்கேரிய புரட்சி, ஈச்மான் விசாரணை , பிரித்தானிய மற்றும் பிரெஞ்ச் காலனியாதிக்கத்தின் முடிவு, பிரதமர் கென்னடியின் கொலை, அமெரிக்காவில் நடந்த "கறுப்பர்களின் புரட்சி" போன்றவை அதில் சில.
உலக வரலாறு இப்படி எத்தனையோ நிகழ்வுகளின் விளைவாக வேகமாக சுழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது , இந்த சூழ்நிலையில் காந்தியின் அரசியல் முக்கியத்துவம் என்ன ? இப்பொழுது பல வருடங்களை கடந்து பின்னோக்கி பார்க்கையில் காந்தியை எவ்வாறு மதிப்பிடுவது ? அவரை பற்றிய நமது முந்தைய தீர்மானங்களில் ஏதும் மாற்றம் உண்டா ?
காந்தியை மதிப்பிடுதல்
பொதுவாக மேற்கில் ,குறிப்பாக அமெரிக்கர்களுக்கு காந்தியை மதிப்பிடுதலில் சில பிரத்யேக சிக்கல்கள் உள்ளன.அவரது ஆளுமையில் உள்ள சில அதீத குணாம்சங்களின் காரணமாக அதை கடந்து நமது பார்வையை செலுத்துவதிலும் , அவரது வாழ்வின் இதர பரிமாணங்களை பற்றி ஆழமாக சிந்திக்கவும் முடிவதில்லை.மேற்கின் ஆன்மீகவாதிகளுக்கு கூட அவரது சமூக , அரசியல் நிலைப்பாடு அல்லது, கொள்கைகளை விளக்க பயன்படுத்தும் மெய்யியல் மொழியும் ,மதம் சார்ந்த வார்த்தை பிரயோகங்களும் புரிதலை காட்டிலும் குழப்பத்தையே விளைவிக்கிறது.
பலரும் ஆழ்ந்த மதிப்புடன் அவரை மகாத்மா எனும் அடைமொழியைக்கொண்டு விளித்தல் கூட அவரை நெருங்கி அணுகுவதற்கு தடையாக இருக்கிறது.அவர் ஓர் மகாத்மா,மாபெரும் புனிதர்,துறவி -அவரது அத்தனை சாதனைகளுக்கும் இந்த பட்டம் போதுமானது,அவரை மேலும் ஆராய்ந்து புரிந்துக்கொள்ள அவசியமில்லை.சாமானிய மக்களின் வாழ்வுடன் நேரடியாக தொடர்பற்று மண்ணில் வாழ்ந்து மறைந்த இன்ன பிற எத்தனையோ புனிதர்கள் போல்,தீர்க்கதரிசிகளைப்போல் ,இறை தூதர்களைப்போல் , அவரையும் அந்த பீடத்தில் ஏற்றி மகாத்மாவாக வழிபடலாம்.
சில நேரங்களில் அவரை பின்பற்றுபவர்கள், மற்றும் அவர் பால் ஆழ்ந்த மதிப்புடயவர்களின் கருத்துக்களை காட்டிலும் காந்தி தன்னை பற்றி அவ்வபொழுது முன்வைத்த துடுக்கான மதிப்பீடுகள் துல்லியமானதாக படுகிறது."நான் சராசரிக்கும் கீழான திறன் கொண்ட ஓர் சாமானிய மனிதன் " என்று ஒருமுறை எழுதினார்.சில முக்கிய அம்சங்களை கணக்கில்கொண்டால் இது ஓரளவு உண்மையே, இந்தியாவில் தேர்ந்த வழக்கறிஞராக பரிணமிக்க முடியாததால் அவர் தென்னாப்ரிக்கா சென்றார்.
மக்களின் மெய்யான அன்பை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டாலும் ,அவரது மகாத்மா அடைமொழியை அவர் ரசிக்கவில்லை ." எனது இந்த மகாத்மா பட்டம் பயனற்றது,சுய சிந்தனையற்ற கூட்டத்தால் வழிபடப்படுவது உண்மையில் பெரும் சலிப்பை ஏற்படுத்துகிறது , என்னிடம் எந்த அதிமானுட சக்தியும் இருப்பதாக நான் கருதவில்லை ,எனக்கு அது தேவையும் இல்லை.ஓர் பலவீனமான சக மனிதன் அணிந்திருக்கும் அழுகக்கூடிய அதே சதையை நானும் அணிந்துள்ளேன் , ஆதலால் மற்றவர்களைப்போல் நானும் தவறு செய்திட வாய்ப்புகள் உண்டு" என்றார்.
அவரை மதிப்பிடுவதில் மேலும் பல சிக்கல்கள் உள்ளன.காந்தியை பற்றியும் அவரது அரசியல் நிலைபாடுகளை பற்றியும் நிலவி வரும் புரிதல் பிழைகளும் இதில் உள்ளடங்கும்.பெரும்பாலும் இவ்வகையான பிழைகளின் பின்னணியில் எவ்வித ஆழமான உள்நோக்கங்கள் இல்லையென்றாலும் ,இவர்கள் பெரும்பாலும் காந்தியின் அந்த குறிப்பிட்ட நிலைப்பாடு குறித்து ஆழமாக அறிந்திருக்கவில்லை.காந்தி காஸ்மீரம் மீதான ராணுவ நடவடிக்கையை ஆதரித்தார் , கோவா மீதான இந்திய படையெடுப்பை அங்கீகரித்திருப்பார், அணு ஆயுத தொழில்நுட்பத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து இருப்பார் , இவைப்போன்ற பிழைகள் அதில் சில.
மேற்கில் மட்டுமென்றில்லை ,தாங்கள் இந்தியர்கள், அன்றாடம் செய்தித்தாள் வாசிக்கிறோம்,காந்தியை பற்றி நாங்கள் விரிவாக விவாதித்துள்ளோம் ,அதனால் நாங்கள் என்ன பேசுகிறோம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்று கருதும் மெத்த படித்த இந்தியர்களிடமும் கூட இவ்வகை புரிதல் பிழைகள் மலிந்து கிடக்கின்றன .காந்திக்கு அவரது அகிம்சையின் மேலிருந்த தெளிவற்ற புரிதலை பற்றியும், மேற்கின் பாணியில் கல்வி கற்ற இந்தியர்களின் நம்பிக்கையையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
காந்தியை புரிந்துக்கொள்வதில் உள்ள முக்கியமான சிக்கல் காந்தியை வழமையான எந்த பட்டியில் கொண்டடைப்பது என்பதிலிருந்தே தொடங்குகிறது.உதாரணமாக - அவரை அமைதிவிரும்பிகளின் வகையில் அல்லது ராணுவத்தை ஆதரிப்பவர் எனும் இந்த இரண்டு மரபில் ஏதோ ஒன்றில் அவரை அடைக்கவேண்டும்.அரசியலிலுள்ள தீய சக்தியை நாம் எதிர்க்க வேண்டும் என்று அவர் கூறியதால்," அவசியமென்றால் " வன்முறையை ஆதரிக்கலாம் என்று அவர் சொன்னதாக பலரும் கருதுகின்றனர்.
காந்தியின் சிந்தனை தொடர்ந்து வளர்ந்து பரினமித்துக்கொண்டே இருந்தது, தொடக்க காலங்களில் போருக்கு தனது ஆதரவை தெரிவித்து இருந்தார் என்பது உண்மையே.ஆனால் அவரது வாழ்வின் இறுதி கட்டத்தில் இந்த நிலைப்பாடு மாறிவிட்டது.ஆனால் அதற்காக எதிர்வினயற்று எதையும் செய்யாது கடந்து செல்லவேண்டும் என்று சொல்லவில்லை.இரண்டாம் உலகப்போரில் அலைய்ஸ் பக்கம் நியாயம் இருப்பதாக எண்ணினாலும், அப்போரை அவர் ஆதரிக்கவில்லை.அதே போல் காஷ்மீர் பிரச்சனையிலும் , பாகிஸ்தான் வரம்பு மீறுகிறது அதை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று எண்ணினாலும் அதற்கு ராணுவத்தை பயன்படுத்துவதில் அவருக்கு ஒப்புதல் இல்லை.
மாறாக அவரது அகிம்சை வழிமுறைகளின் மேல் நம்பிக்கை வைத்து அரசியல் சிக்கல்களை தீர்க்க அதை பயன்படுத்தினார்.இந்த சமயங்களில் தொடர்ந்து அகிம்சை முறையை பரிசோதித்துக்கொண்டே இருந்தார், நெருக்கடியான சூழலில் கூட அகிம்சை திறமையாக செயலாற்றும் எனும் அவரது நம்பிக்கை நடைமுறைவாதிகளுக்கு அத்தனை ஏற்புடையதாக இல்லை.காஷ்மீர் பிரச்சனையின் பொழுது அரசியல் ரீதியாக அவரது அகிம்சை வழிமுறை சரியாக செயலாற்றவில்லை என்று புரிந்துக்கொள்ள வேண்டுமே தவிர அவர் முற்றிலும் அகிம்சயை நிராகரித்தார் என்று புரிந்துகொள்ள கூடாது.
போரும் அரசியல் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படும் வழமையான சூழல்களை ஆராய்ந்து அதன் பின்புலத்தை கண்டறிந்து அதற்கு மாற்றாக நடைமுறை சார்ந்த அகிம்சை முறை போராட்ட வழிமுறைகளை வளர்த்தெடுப்பது காந்தியின் மிக முக்கியமான பங்களிப்பு.இத்திசையில் அவரது பணி முழுமையானதில்லை என்றாலும் அவர் ஓர் முன்னோடி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.இதன் பொருட்டே கூட அவரை அரசியலில் வன்முறையை ஆதரிப்பவர் அல்லது எதிர்ப்பவர் எனும் இருமைக்குள் அடக்கிவிட முடியாது,ஏனெனில் அவர் இவை இரண்டுமே அல்ல.அவர் "வன்முறையற்ற போர் " எனும் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் ஓர் ஆய்வாளர்.
காந்தியை மதிப்பிடுவதில் மிகமுக்கியமான இறுதி பிழை என்னவெனில்,சில நேரங்களில் அவரது அரசியலை நேருவிற்கு கீழிருந்த சுதந்திர இந்தியாவின் கொள்கைகளுடன் ஒத்தது என்று நம்புவது.காந்தியிடத்தில் நேருவிற்கு அபார மரியாதை இருந்தாலும் , இந்திய தேசிய காங்கிரசோடு இனைந்து காந்தி நீண்ட காலம் இந்திய சுதந்திரத்திற்கு போராடி இருந்தாலும் கூட , இன்றைய காங்கிரஸ் அரசின் கொள்கை முடிவுகளுக்கும் காந்திய கொள்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
உண்மையில் , இந்து முஸ்லீம் மதக்கலவரத்தை அமைதி படுத்த கொல்கத்தாவில் இருந்த காந்தி ஆழ்ந்த சோகத்தில் இருந்தார், ஆகஸ்ட் 15 1947 சுதந்திர தினத்தை அவர் கொண்டாடவில்லை .கலவரம் அதன் தீவிரத்தால் அவரை சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி, இந்திய சமூகத்தில் உள்ள ஓர் பலவீனத்தை அது உணர்த்தியதாக எண்ணினார், அதன் காரணமாக இந்தியா மீண்டும் வெளிநாட்டு ஆளுகைக்கு கீழ்படிந்து விடுமோ என்று அவர் அஞ்சினார்.
காந்தி இந்திய பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார்.காங்கிரஸ் தலைவர்களே அத்தீர்வை ஏற்றுக்கொண்டனர்.காஸ்மீரில் இந்திய துணையுடன் அகிம்சை போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார், அதுவும் புறக்கணிக்கப்பட்டது.சுதந்திர இந்தியா ராணுவ துணையின்றி தனது சுதந்திரத்தை காத்துக்கொள்ளும் என்று காந்தி கனவு கண்டார்.மாறாக சுதந்திரத்திற்கு முன்பான இடைக்கால அரசாங்கத்திலும் சரி , சுதந்திரத்திற்கு பின்பும் சரி ராணுவத்திற்கான செலவு அதிகரித்தது .இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்திட வாய்ப்புண்டு அதனால் உலக அமைதிக்கு பங்கம் வரலாம் என்று அவர் எச்சரித்தார்.அகிம்சை முறையை பின்பற்றி எப்படி மாபெரும் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் பிடிகளிலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக்கொண்டோதோ அதேப்போல் இந்தியா தனது சுதந்திரத்தை அகிம்சை வழியில் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
காந்தி இந்திய பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்தார்.காங்கிரஸ் தலைவர்களே அத்தீர்வை ஏற்றுக்கொண்டனர்.காஸ்மீரில் இந்திய துணையுடன் அகிம்சை போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார், அதுவும் புறக்கணிக்கப்பட்டது.சுதந்திர இந்தியா ராணுவ துணையின்றி தனது சுதந்திரத்தை காத்துக்கொள்ளும் என்று காந்தி கனவு கண்டார்.மாறாக சுதந்திரத்திற்கு முன்பான இடைக்கால அரசாங்கத்திலும் சரி , சுதந்திரத்திற்கு பின்பும் சரி ராணுவத்திற்கான செலவு அதிகரித்தது .இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்திட வாய்ப்புண்டு அதனால் உலக அமைதிக்கு பங்கம் வரலாம் என்று அவர் எச்சரித்தார்.அகிம்சை முறையை பின்பற்றி எப்படி மாபெரும் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் பிடிகளிலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக்கொண்டோதோ அதேப்போல் இந்தியா தனது சுதந்திரத்தை அகிம்சை வழியில் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
---மேலும் ---
சுகி
காந்தி ருபாய் நோட்டுகலில் மட்டும் அல்ல/ சில மனிதர்கலின் மனதிலும்
ReplyDelete